search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவேகானந்தா சேவாலய சிறுவர்களுக்கு முன்னாள் மேயர் ஆறுதல்
    X

    முன்னாள் மேயர் அ.விசாலாட்சி, இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் ஆகியோர் சிறுவர்களுக்கு பழங்களை வழங்கிய காட்சி.

    விவேகானந்தா சேவாலய சிறுவர்களுக்கு முன்னாள் மேயர் ஆறுதல்

    • முன்னாள் மேயர், இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிறுவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
    • சிறுவர்களுக்கு பழங்களை வழங்கினார்கள்

    திருப்பூர் :

    திருமுருகன்பூண்டி விவேகானந்தா சேவாலயத்தை சேர்ந்த 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி, இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரம் ஆகியோர் நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரியில் 11 சிறுவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்து ஆறுதல் கூறியதுடன், பழங்களை வழங்கினார்கள்.

    இதில் அ.ம.மு.க. பொறுப்பாளர்கள் முத்துக்குட்டி, ஜெகதீஷ், திலகவதி, வினுப்பிரியா, கீதா, உஷாமூர்த்தி, நௌபில்ரிஸ்வரன் மற்றும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகம்மது, நிர்வாகிகள் சதீஷ்குமார், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×