என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் தூக்குப்போட்டு பெண் டெய்லர் தற்கொலை
    X

    கோப்புபடம்

    பல்லடத்தில் தூக்குப்போட்டு பெண் டெய்லர் தற்கொலை

    • கணவன்- மனைவி இருவரும் பனியன் நிறுவனத்தில் டெயிலர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
    • மோகனப்பிரியாவின் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருப்பூர் மெயின் ரோடு கரையான்புதூர் பகுதியில் வசித்து வருபவர் முருகேஷ். இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 33). கணவன்- மனைவி இருவரும் பனியன் நிறுவனத்தில் டெயிலர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மோகனப்பிரியா வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    இதனைப் பார்த்து அலறி துடித்த அவரது கணவர் முருகேஷ், இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், மோகனப்பிரியாவின் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×