என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
- அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
திருப்பூர்:
திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராடிய விவசாயிகள் மீது தமிழக அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும் , விவசாயிகள் மீது அராஜக போக்கை கடைபிடிப்பதாக தமிழக அரசை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து விவசாய சங்கங்களின் போராட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
Next Story






