search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்  நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

    • விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமா்ப்பிக்கலாம்.
    • விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் நாளை 24-ந்தேதி நடக்கிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை 23-ந்தேதி ( வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம்.

    மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமா்ப்பிக்கலாம். இக்கூட்டரங்கில் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

    Next Story
    ×