என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா
Byமாலை மலர்18 July 2023 7:18 AM GMT
- ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கடிதம் அல்லது தகவல் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கேட்டு பெற முடியும்.
- பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தீர்மானங்களை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி மன்ற தீர்மான நகல்களை விவசாயிகள் சிலர் நேரில் சென்று வாய்மொழியாக கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு ஊராட்சி செயலாளர் ஆவணங்களை கடிதம் அல்லது தகவல் உரிமைச் சட்டம் மூலமாகத்தான் கேட்டு பெற முடியும். வாய் மொழியாக கேட்டால் தர இயலாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி ஊராட்சி மன்ற தீர்மானங்களை விவசாயிகள் பார்வையிட ஏற்பாடு செய்தனர். இதையடுத்து தீர்மான விவரங்களை பார்வையிட்ட விவசாயிகள் பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X