என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம் விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகள் பெறலாம்
    X

    கோப்புபடம்.

    புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டம் மூலம் விவசாயிகள் இலவசமாக மரக்கன்றுகள் பெறலாம்

    • 26,800 மரக்கன்றுகள் மதுக்கரை வனவியல் நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு நடவிற்கு தயார் நிலையில் உள்ளது.
    • விவசாய நிலங்களில் வரப்புகளில், பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை மூலம் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வை இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தில் விவசாய நிலங்களில் வரப்புகளில் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது முழுமையாக நடவு செய்ய மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    சுல்தான்பேட்டை வட்டாரத்திற்கு 1,300 பெரு நெல்லி, 15,700 மகாகனி, 4,500 குமிழம், 5,300 மலை வேம்பு என மொத்தம் 26,800 மரக்கன்றுகள் மதுக்கரை வனவியல் நாற்றங்கால்களில் வளர்க்கப்பட்டு நடவிற்கு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகள் இம்மரக்கன்றுகளை பெற சுல்தான்பேட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து பரிந்துரை படிவம் பெற்று வனத்துறை நாற்றாங்காலில் நேரடியாக மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் விஜய கல்பனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×