search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழைநீர் சேகரிப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும் -  கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்

    மழைநீர் சேகரிப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    • மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் சார்பில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும்.மழைநீரை சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்கள், கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார்செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாக பயன்படுத்தலாம். சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம். இத்திட்டம் உள்ளூரிலேயே கிடைக்கும் விலைமலிவான மூலப்பொருட்களை கொண்டு எளிதாக கட்டமைக்கப்பட்டு, பெரும்பாலான வசிப்பிடங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தக்கூடியது.

    வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு மழைநீர் –சேகரிப்பின் முக்கியத்துவம் பொருள் குறித்தும், இது சம்பந்தமாக ஊக்குவிக்கும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேல் நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    மேற்காணும் பொருள் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எல்இடி., ஊர்தி மூலம் விழிப்புணர்வு ஓட்டம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. அனைவரும் மழைநீரின் முக்கியத்துவத்தை அறிந்து மழைநீர் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    தற்போது மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த குறும்படம் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் திரையிடப்பட்டது. தொடர்ந்து சமூகநலத்துறையின் சார்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டம்-2005 குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இப்பேரணியில் தமிழ்நாடு வடிகால் வாரிய செயற்பொறியார்கள் மாதேஸ்வரன், கண்ணன், உதவி செயற்பொறியார்கள் விஜயலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும் சசிக்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்ட அலுவலர் ஸ்டெல்லா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×