என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான குமார்.
வெள்ளகோவிலில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து டிரைவர் பலி
- குமாரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
- வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் காங்கயம் அரசு போக்குவரத்து கழக கிளையில், அரசு பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தனது மகள் யாழினியை (15) பின் இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டு வெள்ளகோவில், அய்யனூர் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீர் என நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் பின்னால் அமர்ந்திருந்த யாழினிக்கு லேசான காயம் ஏற்பட்டது. குமார் பலத்த காயம் அடைந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் குமாரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
ஆனால் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன குமாருக்கு சங்கீதா என்ற மனைவியும், யாழினி என்ற மகளும், பூவேந்திரன் என்ற மகனும் உள்ளனர்.






