search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது

    • பயிற்சி 15-ந் தேதி காலை 10 மணிஅளவில் நடைபெறுகிறது.
    • விவசாயிகள் பங்கேற்று நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை 15-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப்பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான உள்வளாக பயிற்சி நாளை 15-ந்தேதி ( வியாழக்கிழமை ) காலை 10 மணிஅளவில் நடைபெறுகிறது.

    விவசாயிகள் இந்த பயிற்சியில் பங்கேற்று நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2248524 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

    Next Story
    ×