என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பனியன் தொழிலாளி தற்கொலை
- மேற்கூரை விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
- போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி மலையம்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் சுரேஷ்குமார்(வயது 38). இவர் பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது, மேற்கூரை விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வெளியே சென்றிருந்த மனைவி வீடு திரும்பிய போது கணவர் சுரேஷ்குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






