search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசி கோவிலில் தீபத்திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்
    X

    கோப்புபடம்.

    அவிநாசி கோவிலில் தீபத்திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்

    • அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்கு 1லட்சத்து 8 தீபத்திருவிழா நடைபெறுகிறது.
    • புண்ணியம் வாய்ந்த தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள், நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை கோவில் அலுவலகத்தில் வழங்கலாம்.

    அவினாசி :

    அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி மாலை 5 மணிக்கு 1லட்சத்து 8 தீபத்திருவிழா நடைபெறுகிறது. இதற்காக கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் இன்று துவங்கி நடக்கிறது.

    இது குறித்து அவிநாசி ஆன்மிக நண்பர்கள் குழு மற்றும் சேக்கிழார் புனிதர் பேரவை நிர்வாகிகள் கூறியதாவது:- இந்து அறநிலையத்துறை ஒத்துழைப்புடன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில்1 லட்சத்து 8 தீபத்திருவிழாவை இரண்டாவது முறையாக நடத்துகிறோம். கோவிலிலுள்ள சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவ மண்டபம், கனகசபை மற்றும் பிரகாரங்கள், கோவில் தீப ஸ்தம்பம் என அனைத்து இடங்களிலும் தீபம் ஏற்றப்படும்.

    இதற்காக 1 லட்சத்து8 அகல் விளக்குகள், விருத்தாச்சலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த புண்ணியம் வாய்ந்த தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள், நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை கோவில் அலுவலகத்தில் வழங்கலாம்.விளக்குகளை வைத்து எண்ணெய் ஊற்றி தீபமேற்ற விருப்பமுள்ள சிவனடியார்கள், பக்தர்கள் வருகிற 7-ந் தேதி காலை, 10 மணிக்கு அவிநாசி கோவிலுக்கு வர வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×