search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாமளாபுரம் பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X
    பேரணியில் கலந்து கொண்டவர்களின் காட்சி.

    சாமளாபுரம் பகுதியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    • சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மங்கலம்

    சாமளாபுரம் பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியானது மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணிக்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் வனிதா, வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த பேரணியில் சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 300 மாணவ,மாணவிகள் சாமளாபுரம் வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.இந்த பேரணியானது சாமளாபுரம் -லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைந்தது.இதைத்தொடர்ந்து வாழைத்தோட்டத்து அய்யன்கோவில் பள்ளி வளாகத்தில் பேரணியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப்பொருளின் தீமைகள் குறித்து மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இறுதியாக மாணவ,மாணவிகள் "போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, மைதிலிபிரபு , லிட்ரசி பள்ளியின் ஆசிரியர்கள் , ஏ.வி.ஏ.டி.பள்ளியின் ஆசிரியர்கள் , மங்கலம் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×