search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடிய ஆறாக்குளம் கிராம மக்கள்
    X

    கோப்புபடம்.

    பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடிய ஆறாக்குளம் கிராம மக்கள்

    • 12 ஆண்டுகளாக ஒரு சிறிய வெடி கூட வெடிக்காமல், தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • நீர், நிலம்,காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் ஆறாக்குளம் கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு சிறிய வெடி கூட வெடிக்காமல், தீபங்கள் ஏற்றி தீபாவளி பண்டிகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து ஆறாக்குளம் கிராம மக்கள் கூறியதாவது :-

    பட்டாசு வெடிப்பதால் மனிதர்களுக்கு மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பட்டாசு வெடிப்பால் ஜீவராசிகள் மக்களிடமிருந்து விலகி சென்று விடும். நீர்,நிலம்,காற்று உள்ளிட்ட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் மாசு அடைகிறது. பறவை இனங்கள் இல்லாவிட்டால் வேளாண்மை பாதிக்கும். இதனால் கடந்த 12 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் யாரும் பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி வீடு தோறும் தீபங்களை ஏற்றி வீட்டிலும்,கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தி உற்றார்,உறவினர் வீடுகளுக்கு சென்று நலம் விசாரித்து அவர்களுக்கு இனிப்பு பலகாரங்களை வழங்கி மனம் விட்டு பேசி மகிழ்ந்து மதியம் குடும்பத்தினர்,நண்பர்களுடன் விருந்து உண்போம். ஏழை மக்களுக்கு எங்களால் முடிந்த தான,தர்மங்கள் செய்திடுவோம்.குழந்தைகள், இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×