என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது
- மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அடிக்கடி ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அடிக்கடி ேராந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி பல்லடம் அருகே உள்ள காளி வேலம்பட்டி பிரிவு பகுதியில் நேற்று ரோந்து பணி மேற்கொண்ட போது அங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்ற அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரது மகன் ஜெகநாதன் (வயது 36) மற்றும் கருமத்தம்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவர் மகன் பிரகாஷ் ( 26) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல பல்லடம் அருகே உள்ள அறிகுறி நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற பல்லடம் சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சித்திரக்கனி ( 43) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மதுபான பாட்டில்களும், பள்ளம் அருகே உள்ள மகாலட்சுமி நகரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற கொடுவாய் நாகலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிவாச்சலம் மகன் கார்த்திக் ( 32), என்பவரிடமிருந்து 9 மதுபான பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்