என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 384 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
- புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 99 பேருக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- 54 கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் கடந்த 2 மாதங்களாக நடத்திய சோதனையில் 384 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்புத் துறை, காவல் துறை அதிகாரிகள் இணைந்து கடந்த 2 மாதங்களாக புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடா்பாக மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனா். இதில் தடை செய்யப்பட்ட 384 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புகையிலைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 99 பேருக்கு ரூ. 5 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடா்ச்சியாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 54 கடைகளைக் கண்டறிந்து அந்தக் கடைகளுக்கு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் 94404-2322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்