search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலை விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு
    X

    ஏலகிரி மலை விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

    • அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நியூ ஜலால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது முவம்மில் என்பவரின் மகன் முகமது மன்சூர் (வயது 19).

    சோமாலபுரத்தை சேர்ந்த இவரது நண்பர் சுஜாய் ( 20) ஆகிய இருவரும் கடந்த 28-ந் பைக்கில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்தனர்.

    சுற்றுலா முடிந்து மலை உச்சியில் இருந்து கீழே இறங்கியபோது முன்னால் சென்ற பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். முகமது மன்சூர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏலகிரிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×