search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக் விபத்தில் தொழிலாளி சாவு
    X

    பைக் விபத்தில் தொழிலாளி சாவு

    • தடுமாறி கீழே விழுந்து பரிதாபம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (வயது27). இவர் மேட்டுபாளையம் பகுதியில் உள்ள பாய் தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இருசக்கர வாகனத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது வாணியம்பாடியில் இருந்து வளையாம்பட்டு நோக்கி சர்வீஸ் சாலையில் பைக் வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் நிர்மல் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×