search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் தூண் விழுந்து தொழிலாளி சாவு
    X

    கோவில் தூண் விழுந்து தொழிலாளி சாவு

    • தூண் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஊராட்சி சார்பில் பேவர் பிளாக் ரோடு போடும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக பேவர் பிளக் கற்களை அருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகில் அடுக்கி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் அந்த கற்களை அங்கிருந்து முருகன் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி உள்ளனர். டிராக்டரை சங்கராபுரம் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி (வயது 48) என்பவர் ஓட்டி சென்றார்.

    கற்களை ஏற்றி கொண்டு வெளியே வரும் போது கோவில் தூண் மீது டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூண் கீழே படுத்துக் கொண்டிருந்த மரம் ஏறும் தொழிலாளி கந்தசாமி (45) என்பவர் மீது விழுந்து அவர் படுகாயம் அடைந்தார்.

    உடனடியாக கந்தசாமியை அப்பகுதி மக்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிராக்டர் டிரைவர் சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×