என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
    X

    தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

    • குடும்ப பிரச்சினையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 32).தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சீனிவாசன் நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×