என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
- 2 வயதில் குழந்தை உள்ள நிலையில் பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே பனங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 33) மரபட்டறை தச்சு தொழிலாளி. இவர் கடந்த 18ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. பிரியா என்கின்ற மனைவியும் 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இது குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






