search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில் மோதி பெண் பலி
    X

    ரெயில் மோதி பெண் பலி

    • தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டு பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு பலியானார்.

    ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×