அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தும் போலீஸ் பாதுகாப்பு வழங்காதது ஏன்?

பொதுமக்கள் கேள்வி நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தும் போலீஸ் பாதுகாப்பு வழங்காதது ஏன்?
Published on

வாணியம்பாடி:

தைப்பூசத்தை முன்னிட்டு இன்று இலவச வேஷ்டி சேலைகளை வழங்க சம்பந்தப்பட்ட விழா ஏற்பாட்டாளர் 2 நாட்களுக்கு உரிய போலீஸ் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் எந்தவித போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை.

இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது எனவும், இத்தகைய பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com