நாட்டறம்பள்ளியில் வாக்கு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் குறித்து விளக்கம் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்.
பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்.
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நாட்டறம்பள்ளி பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி அலுவலர்களுக்கு பெயர் சேர்த்தல் குறித்து பயிற்சி கூட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வாக்குச் சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உள்பட 223 பங்கேற்றனர்.

பயிற்சியின் போது தாசில்தார் க.குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் நிர்மலா, வருவாய் ஆய்வாளர்கள் கெளரி, அன்னலட்சுமி மற்றும் தேர்தல் மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com