என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி வாலிபர் பலி
- தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம் லத்தேரி காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 வயதுதக்க ஆண் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது க சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர் இறந்தவரின் முகம் முழுவதும் சிதைந்த இருப்பதால் இறந்தவரை அடையாளம் காண்பதில் போலிசாருக்கு சவாலாக உள்ளது.






