என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு மனுநீதி நாள் முகாம்
    X

    கோப்புப்படம்

    சிறப்பு மனுநீதி நாள் முகாம்

    • 49 மனுக்கள் பெறப்பட்டது.
    • ரூ.1 லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை வழங்கினர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே நேற்று சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கீழீமுருங்கையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த இந்த முகாமிற்கு வாணியம்பாடி வருவாய் கோட்ட அலுவலர் (பொறுப்பு) விஜயன் தலைமை தாங்கினார்.

    சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பத்மநாபன் முன்னிலை வகித்தார். தாசில்தார் மகாலட்சுமி வரவேற்றார்.

    இந்த முகாமில் 49 மனுக்கள் பெறப்பட்டது. 31 மனுக்கள் ஏற்கப்பட்டன 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 10 மனுக்கள் பரிசீலனை உள்ளது.

    ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகை வேளாண்மை இடுபொருட்கள் தோட்டக்கலையில் தண்ணீர் பாசன மற்றும் இதர உதவிகள் ஆகியவற்றை சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் கலந்து கொண்ட வழங்கினார்.

    மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ்குமார் துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன் மாவட்டக்குழு உறுப்பினர் சாந்தி ஒன்றிய கவுன்சிலர்கள் மனோரஞ்சிதம் முத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் நவமணி ரகுபதி ஜெலட்சுமி குப்புசாமி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு முடியில் துணை தாசில்தார் குமராவேலு நன்றி கூறினார்.

    Next Story
    ×