search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கர்நாடகாவுக்கு பைக்கில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்
    X

    கர்நாடகாவுக்கு பைக்கில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்

    • 500 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன் ரெயில் நிலையம் அருகே கர்நாடகாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் ஜங்களாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் பைக்கில் இருந்த 2 பேர் வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். சந்தேகம் அடைந்த போலீசார் பைக்கில் இருந்த மூட்டைகளை சோதனை செய்தனர்.

    அதில் 500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர் பைக்கையும், ரேசன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×