search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓடும் ரெயிலில் கஞ்சா பறிமுதல்
    X

    ஓடும் ரெயிலில் கஞ்சா பறிமுதல்

    • 6 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் ரெயில் நிலையத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர்

    இந்த நிலையில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அப்போது போலீசார் சோதனை செய்தனர்.

    கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது ெதரிந்தது.

    பின்னர் ரெயில்வே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்திய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×