என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு
- கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது
- புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தை பார்வையிட்டார்
ஆம்பூர்:
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்க்கு சுற்றுச்சுவர், அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டு மான பணி நடந்து வருகிறது.
இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழையமனை பகுதிக்கு நடைப்பயிற்சி பூங்காவும், செயல்படாத அங்கன்வாடி மையத் தினையும் செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் அப்பகு தியில் பழுதடைந்து இருந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட உத்தரவிட்டார்.
கீழ்கன்றாம்பல்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாண வர்களுக்கு கழிப்பறை வசதி மற்றும் அதே பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தினையும் பார்வையிட்டார்.
Next Story






