search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு
    X

    விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு

    • போலீஸ் சூப்பிரண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்
    • 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் கொடி அணி வகுப்பு நடத்தினர்.

    நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்து மாணிக்கம் கலந்து கொண்டு அணிவகுப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    வாணியம்பாடி பஸ் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் சி.எல்.ரோடு, கச்சேரி ரோடு, கணியம்பாடி தெரு, பூக்கடை பஜார், பொண்ணியம்மன் கோவில், திருவள்ளூவர் தெரு, ஆசிரியர் நகர், காதர்பேட்டை என முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×