என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலையில் நாற்று நட்டு போராட்டம்
- பொதுமக்கள், மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
- தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த அனேரி கிராமத்தில் மண் சாலை அமைந்துள்ளது. இங்குதார்ச்சாலை அமைத்து தர அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக இந்தச் சாலை குண்டும் குழியுமாகவும், சேறும், சகதியுமாக மாறியது.
இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் அப்பகுதி மக்கள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத் திய பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






