search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தள்ளுவண்டி கடைகளுக்கு அபராதம்
    X

    தள்ளுவண்டி கடைகளுக்கு அபராதம்

    • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை
    • எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது

    ஆம்பூர்:

    ஆம்பூரில் சாலையோர கடைகள் மற்றும் சில ஓட்டல்களில் உணவுகள் தரமற்றதாக இருப்பதாக உணவு துறை அதிகாரிக ளுக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஆம்பூர் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிசாமி ஆகியோர் ஆம்பூர் நகராட்சி பகுதியில் உள்ள உமர் ரோட்டில் பானிபூரி கடை, போண்டா கடை மற்றும் தள்ளுவண்டிசிக்கன், மட்டன் சூப் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் 3 தள்ளு வண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற எச்சரித்து நோட்டீஸ் வழங் கப்பட்டது.

    மேலும் 2 கடைகளில் தமிழக அரசு தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து தலா ரூ.2000 வீதம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு தள்ளு வண்டி கடையில் ஒருமுறை பயன்படுத்திய எண் ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து சுமார் 3 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்து கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் அந்த கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தள்ளுவண்டி கடைக்காரர்கள் உணவுப் பொருளில் வண் ணம் சேர்க்காமல், வாழை இலையை பயன்படுத்துவது, சில் வர் பிளேட்டில் உணவு தருவது, பஜ்ஜி போன்றவற்றை கண் ணாடி பெட்டியில் வைத்து விற்பனை செய்வது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    Next Story
    ×