என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி
- தண்டவாளத்தை கடந்த போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
டெல்லியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஜோலார் பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாணியம் பாடி ரெயில்நிலையம் அருகே வந்தபோது சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒரு வர் தண்டவாளத்தை கடந் துள்ளார். அவர் மீது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து ஜோலார் பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் சென்று ரெயிலில் சிக்கி பலியான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
Next Story






