

வாணியம்பாடி:
மாண்டஸ் புயலால் வாணியம்பாடி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதி சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால், வாணியம்பாடி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.
இதேபோல், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில், சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதை நகராட்சிப் பணியாளர்கள் வெட்டி அகற்றினர்.