search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாணியம்பாடியில் சாலையில் விழுந்த மரம்
    X

    வாணியம்பாடியில் சாலையில் விழுந்த மரம்

    • நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்
    • போக்குவரத்து மாற்றம்

    வாணியம்பாடி:

    மாண்டஸ் புயலால் வாணியம்பாடி, அதைச் சுற்றியுள்ள பகுதியில் பலத்த மழை பெய்தது. வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதி சாலையோரம் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால், வாணியம்பாடி - திருப்பத்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

    இதேபோல், வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில், சார் பதிவாளர் அலுவலகம் அருகே இருந்த மரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. இதை நகராட்சிப் பணியாளர்கள் வெட்டி அகற்றினர்.

    Next Story
    ×