என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி மெக்கானிக் பலி
    X

    லாரி மோதி மெக்கானிக் பலி

    • பைக் நொறுங்கியது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் சாவடி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 43). இவர் வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் நேற்றிரவு வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது ராஜ்குமார் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் ராஜ்குமார் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிேரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×