search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு
    X

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஆண் பிணம் மீட்பு

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள ரெயில் நிலையம் அருகே புது ஓட்டல் தெரு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கும் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் ரெயில் நிலையம் பகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துள்ளதாகவும் தெரியவந்தது. மேலும் இவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    இதுகுறித்து ஜோலார்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அந்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×