லாரி கவிழ்ந்து 6 டன் மாதுளை, கொய்யா நாசம்

2 லட்சம் மதிப்பிலான பழங்கள் சேதமடைந்தன போலீசார் விசாரணை
லாரி கவிழ்ந்து 6 டன் மாதுளை, கொய்யா நாசம்
Published on

ஜோலார்பேட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் பாலப்பன் (வயது 52).

இவருக்கு சொந்தமான லாரியில் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 5 டன் மாதுளம் பழம் மற்றும் கொய்யாப்பழம் 1 டன் என 6 டன் பழங்களை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்றனர்.

அப்போது திருப்பத்தூர் நாட்டறம்பள்ளி அருகே பங்களா மேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக வந்து அருணாச்சலம் ஓட்டி சென்ற லாரி மீது மோதியது.

கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் அருணாச்சலம் உயிர் தப்பினார். மேலும் 2 லட்சம் மதிப்பிலான பழங்கள் சேதமடைந்தன.

விபத்து ஏற்படுத்திய மற்றொரு லாரியின் ஓட்டுனர் லாரியை அங்கே விட்டு தப்பி சென்றார் இந்த சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

X

Maalai Malar
www.maalaimalar.com