என் மலர்
உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
- உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் கன்னிகாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி நித்யா (வயது 26) இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
நித்யாவிற்கு சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நித்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






