search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மீது பைக் மோதி கட்டிட தொழிலாளி பலி
    X

    லாரி மீது பைக் மோதி கட்டிட தொழிலாளி பலி

    • வேலை முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த நாயனசெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). இவர் கட்டிட தொழில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர். நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் கட்டிட வேலைக்கு கார்த்திக் சென்றார். வேலை முடிந்து மாலை பைக்கில் வீடு திரும்பினார்.

    அப்போது ஆத்தூர்குப்பம் அருகே வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விரமாக பைக் மோதியது. இதில் கார்த்திக் பலத்த காயம் அடைந்தார்.

    அங்கிருந்து பொது மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாட்ட றம்பள்ளி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×