search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கடத்திய குட்கா பறிமுதல்
    X

    ரெயிலில் கடத்திய குட்கா பறிமுதல்

    • 8 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கடத்திய 8 கிலோ போதை குட்கா பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து கடத்திய நபர்கள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் ரெயில்வே போலீசார் நேற்று மாலை பிளாட்பாரத்திலும் ரெயில்களிலும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் உள்ள 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

    அப்போது அந்த ரெயிலில் உள்ள பின்பக்க பொது பெட்டியில் சோதனை செய்தபோது கழிவறையின் அருகே கேட்பாரற்று கிடந்த சோல்டர் பேக் பையில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட பான் மசாலா ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் குட்கா பொருள் இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து போதைப் பொருள் கடத்தி வந்த நபர் குறித்து ரெயில் பெட்டியில் விசாரணை மேற்கொண்டதில் கடத்தி வந்தவர் குறித்த விவரம் தெரியாததால் சுமார் 25 ஆயிரம் மதிப்புள்ள 8 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ஓடும் ரெயிலில் போதைப் கடத்திய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×