என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
திருப்பத்தூர்:
ஜார்க்கண்ட் மாநிலம் ஹத்தியாவிலிருந்து கர்நாடக மாநிலம் எஸ்வந்த்பூர் வரை செல்லும் ஹத்தியா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மதியம் காட்பாடி வழியாக சென்று கொண்டு இருந்தது.
அப்போது திருநெல்வேலி உட்கோட்ட ரெயில்வே பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையிலான போலீசார் காட்பாடி ரெயில் நிலையத்தில் ஹத்தியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.
ரெயில் ஜோலார்பேட்டை அருகே சென்ற போது 33 பெட்டியின் இருக்கைக்கு அடியில் 4 பைகளில் 20 பண்டல்களில் 38 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த 2 வாலிபர்களை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியை சேர்ந்த அல்தாப் நசீர் (வயது 20), மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஜெட்லி (20) என தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் ஒரிசா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்திச் சென்று பெங்களூர் வழியாக கேரளா எடுத்துச் சென்று விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பிடிபட்ட வாலிபர்கள் மற்றும் கஞ்சாவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3.80 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்