search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்
    X

    ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட 4 கிலோ கஞ்சாவை படத்தில் காணலாம்.

    ரெயிலில் கடத்திய கஞ்சா பறிமுதல்

    • 4 கிலோ சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ரெயிலில் அடிக்கடி கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து ரெயில்களில் சோதனை நடத்த ரெயில்வே போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அசாம் மாநிலம் திப்ரூகர் ரெயில் நிலையத்தில் இருந்து கன்னி யாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் காட்பாடியை கடந்து சென்று கொண்டிருந்தது. அந்த ரெயி லில் சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை நடத் திக்கொண்டிருந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம் பூர்- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்ற போது, பொது பெட்டியில் கழிவறை அருகே கேட்பா ரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் 4கிலோ கஞ்சா இருப்பது தெரியவந் தது.

    இதுகுறித்து ரெயில் பெட்டி களில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய் தனர். பின்னர் கஞ்சாவுடன் பையை பறிமுதல் செய்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு கஞ்சா கடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×