என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வாணியம்பாடி அருகே ரெயில் மோதி சிறுவன் பலி
- ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
வாணியம்பாடி அருகே சாலமாபாத் மசூதி தெருவை சேர்ந்தவர் ஆயூப்கான் இவரது மகன் ஆசிப் கான் (வயது 17). நேற்று மதியம் வாணியம்பாடி ரெயில் நிலையம் புதூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது ஜோலார்பேட்டை காட்பாடி செல்லும் மார்க்கத்தில் சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே ஆசிப் கான் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ேமலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






