search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவன் நீரில் மூழ்கி பலி
    X

    சிறுவன் நீரில் மூழ்கி பலி

    • குட்டையில் குளிக்கச் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி அன்பழகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் இவரது மகன் சந்துரு (வயது 16) மற்றும் இவரது தம்பி தினேஷ் (வயது 14) ஆகியோர் நண்பர்கள் கவியரசு, மாதேஷ் நேற்று அருகில் உள்ள பெரிய ஆண்டவர் கோவில் குட்டையில் குளிக்க சென்றனர்.

    தண்ணீரில் குளித்து கொண்டிருந்த போது முட் செடியில் மாட்டிக் கொண்டார்.

    இதனால் இவரது தம்பி தினேஷ் மற்றும் நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். சந்துருவை காப்பாற்ற முடியாததால் தினேஷ் உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் சந்துருவை காப்பற்ற ராமநாதன் குட்டையில் குதித்து முட் புதரில் சிக்கிக்கொண்ட சத்துருவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் சோதித்த போது சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது சம்பந்தமாக ராமநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்க பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    குட்டையில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கிய இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×