என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர்.
இவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடியேறினர்.
இந்த நிலையில் அஜித் குமாருக்கும், சத்யாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அஜித் குமார் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






