search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து ரூ.23 ஆயிரம் திருட்டு
    X

    கோப்புப்படம்

    ஏ.டி.எம். மையத்தில் உதவி செய்வது போல் நடித்து ரூ.23 ஆயிரம் திருட்டு

    • ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு ஏமாற்றிய மர்மநபர்கள்
    • 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடியில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து ரூ.23 ஆயிரம் பணத்தை நூதனமுறையில் திருடிய 3 பேரை நகர போலீசார் கைது செய்தனர்.

    வாணியம்பாடி சி.எல்.சாலையில் உள்ள பொதுதுறை வங்கியின் ஏடிஎம் மையத்தில் வாணியம்பாடியை சேர்ந்த ரங்கநாதன் (55) என்பவர் பணம் எடுக்க சென்றுள்ளார்.

    அப்போது அங்கிருந்த மர்மநபர் ஒருவர் ரங்கநாதனிடம் பணம் எடுத்து தர உதவுவது போல் நடித்து ரங்கநாதனின் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அவர் சென்றவுடன் மர்மநபருடன் வந்திருந்த மேலும் 2 பேர் சேர்ந்து ரங்கநாதனின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவரது கணக்கில் இருந்த 23 ஆயிரம் பணத்தை எடுத்து நூதன முறையில் எடுத்தனர்.

    இதுகுறித்து ரங்கநாதன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி ரங்கநாதனிடம் நூதனமுறையில் பணத்தை திருடிய உதயேந்திரம் புதுமனை தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (39), இளையநகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (28), தேவமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு (30 ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களி டமிருந்து 5 ஏடிஎம் கார்டுகள், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.9500 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×