search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையம் முன்பு வியாபாரி தீக்குளிக்க முயற்சி
    X

    போலீஸ் நிலையம் முன்பு வியாபாரி தீக்குளிக்க முயற்சி

    • தகராறு குறித்து விசாரணை
    • போலீசார் அறிவுரை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறபள்ளியை அடுத்த டோல்கேட் முத்தன பள்ளி பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 35). அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (32).

    இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வினோத்குமாருக்கும் மாசிலாமணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது மாசிலாமணி, வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வினோத்குமார் நாட்டறம் பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் நாட்டறம் பள்ளி போலீசார் மாசிலா மணியை வரவழைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.

    விசாரணை முடிந்து போலீஸ் நிலையத்திற்கு வெளியே வந்து தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டில் எடுத்து வந்து போலீஸ் நிலையம் முன்பு தனது உடல் மீது ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றி அவருக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×