வாலிபர் மாயம்

தந்தை போலீசில் புகார் போலீசார் தேடி வருகின்றனர்
வாலிபர் மாயம்
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த சின்ன பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜி இவரது மகன் சிவா (வயது 37) இவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி சிவா வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ராஜி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிவாவை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com