என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வாணியம்பாடியில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடி:
வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி நகரம் மற்றும் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோ.செந்தில்குமார் மற்றும் நகர செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி.சம்பத் குமார் ஆகியோர் தொடக்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வடிவேல், மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.ஆர். ராஜேந்திரன், மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், மேற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் எஸ். பாரதிதாசன், பேரூர் கழக செயலாளர் சரவணன், சிவக்குமார், நாட்டறம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் சாம்ராஜ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் 1000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்