10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பத்தூர் எஸ்.பி.யிடம் புகார் மனு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
10 ரூபாய் நாணயம் வாங்க மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

இதில், திருப்பத்தூரைச் சேர்ந்த புரட்சி என்பவர் அளித்த மனுவில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பஸ்கள், கடைகள், வணிக வளாகங்களில் 10 ரூபாய்

நாணயங்களை வாங்க மறுக் கின்றனர். எனவே, 10 ரூபாய் நாணயங்களை அனைத்து இடங்களிலும் வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இக்கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி. புஷ்பராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில் (திருப்பத்தூர்), சரவணன் (ஆம்பூர்), தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com