என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சிக்கன் கடையில் வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது
    X

    சிக்கன் கடையில் வெளிமாநில மது விற்ற வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மது பாக்கெட்டுகள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சரகத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நகரம், அம்பலூர், நாட்டறம்பள்ளி, ஆலங்காயம் திம்மாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய் யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ண னுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு போலீசார் நாட்டறம்பள்ளி அருகே கல்லார் கிராமத்தில் சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள சிக்கன் கடையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்து வந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×